புறநானூற்றில் பேய்

Image
 பாடியவர் : பெருஞ்சித்திரனார் பாடப்பட்டோர் : இளவெளிமான் திணை : பொதுவியல் துறை : கையறுநிலை பாடல்: கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா, வாய் வன் காக்கையும் கூகையும் கூடிப் பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் காடுமுன் னினனே, கட்கா முறுநன் தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப், பாடுநர் கடும்பும் பையென் றனவே; தோடுகொள் முரசும் கிழிந்தன, கண்ணே; ஆள்இல், வரைபோல் யானையும் மருப்புஇழந் தனவே; வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப,  எந்தை ஆகுல அதற்படல் அறியேன்; அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற என்ஆ குவர்கொல், என் துன்னி யோரே? மாரி இரவின், மரங்கவிழ் பொழுதின், ஆரஞர் உற்ற நெஞ்சமொடு , ஓராங்குக்  கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு, வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து, அவல மறுசுழி மறுகலின், தவலே நன்றுமன் தகுதியும் அதுவே. விளக்கம் : கள்ளை விரும்பும் காவலன் காட்டில் கிடக்கிறான். அவனை இடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் தாழியின்மேல் செம்பருந்தும், பொகுவல் என்னும் பிணம்தின்னிக் கழுகும் அஞ்சாமல் காத்திருக்கின்றன. வாய் வலிமை கொண்ட காக்கை, கோட்டான், பேய்க்கூட்டம் முதலானவும் சுழன்றுகொண்டிருக்கின்றன. அவனைப

சைவ ஸ்பெஷல்

 சைவ ஸ்பெஷல்:


அம்புளி சோறு:


குழைய குழைய வேகவைத்த அரிசியுடன், வேளைப்பூவை போல தோற்றமளிக்கும் வெண்மையான கெட்டித்தயிர் கலந்து, கூழ்மாதிரி அரைத்து உண்ணும் உணவை, அக்காலத்தில் "அம்புளி சோறு" என அழைத்தனர். அதற்கு வெஞ்சனமாய்(Side dish) வேளைக்கீரையை கூட்டு வைத்து உண்டனர்.இதனை,


"கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல்

தாதொரு மறுகின் போதொடு பொதுளிய

வேளை வெண்பூ வெண்தயிர்க் கொளீஇ,

ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை"


எனும் புறநானூற்றின் பாடல் ஒன்றின் வாயிலாய் அறிய முடிகிறது. இதனை சங்ககால சோழனான கோப்பெருஞ்சோழன் தன் நண்பனான பிசிராந்தையார் பற்றி பாடும்பொழுது அவர் இருப்பிடமான பொதிகைமலையில் வாழ்ந்த மக்களின் உணவாக "அம்புளி சோறு" பற்றி சிலாகித்து பாடுகிறார்.


பாலுடை அடிசில்:


அரிசியை தண்ணீரில் கலந்து தண்ணீரில் வேகவைத்து வடிப்பதுபோல், அக்கால தமிழர்கள் பாலினை கொதிக்க வைத்து, அதனுள் அரிசியினை களைந்து, வேகவைத்து அதனை வடித்து உண்டுள்னர். இதற்கு "பாலுடை அடிசில்" எனப்பெயர். திருமணம் முடிந்து வந்த புதுமகள், தான் புகுந்த வீட்டில் இச்சோற்றினை வடித்ததாக அகநானூறு கூறுகிறது.


"விழவுடன் அயர வருகதில் அம்ம

துவரப் புலர்ந்து தூமலர் கஞலித்

தகரம் நாறுந் தண்நறுங் கதுப்பின்

புதுமண மகடூஉ அயினிய கடிநகர்ப்

பல்கோட்டு அடுப்பில் பால்உலை இரீஇக்

கூழைக் கூந்தல் குறுந்தொடி மகளிர்

பெருஞ்செய் நெல்லின் வாங்குகதிர் முறித்துப்

பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கைக்

கடிதிடி வெரீஇய கமஞ்சூல் வெண்குருகு"


மேற்கண்ட பாடல் வாயிலாய் இவற்றை அறியலாம்.


குப்பைகீரை கடைசல்:


வறுமையில் வாடிய அக்கால மக்கள், குப்பையில் விளையும் கீரையினை பறித்து, அதனை உப்பில்லாத உலையில் இட்டு (அக்காலத்தில் உப்பும் நெல்லும் சமவிலையில் இருந்தது) அதனுடன் அரிசியை வேகவைத்து கீரைசாதமாய் உண்டனர். மன்னன் குமணனின் நாட்டிலிருந்த வறுமையில் உழன்ற புலவரின் குடும்ப சூழ்நிலையை இப்பாடல் காட்டுகிறது. புறநானூற்றின் பிற பாடல்களில் கீரைச்சோறு பற்றிய குறிப்புகளும் உண்டு.


அவல் கரும்புசோறு-பால் கலவை:


வயலில் முற்றிய கணுவுடைய கரும்பினை தேர்ந்தெடுத்து, அதனை பிழிந்து, பாகுவாக காய்த்து அந்த பதத்தில் பால் கலந்து, அதனுடன் செம்மையான நெல்லினை இடித்து தயாரித்த அவலினை கலந்து, கரும்பு பாகுடன் ஊரவைத்த இனிப்பினை சுற்றத்தாருக்கு உண்ண கொடுத்துள்ளனர். அகநானூற்றின் 217 ம் பாடல் இதனை கூறுகிறது.


மேலும் பல சங்ககால உணவுகளை வரும் நாட்களில் காண்போம்.




Comments

  1. வறுமையால் குப்பைப்கீரை உண்டனர் என்று கூற இயலுமா? அந்தக்கால வறுமை பற்றி வேறு குறிப்புகள் உண்டா. நாரை விடு தூது ஒரு எடுத்துக்காட்டு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சனிக்கிழமை சங்ககால அசைவ ஸ்பெஷல்

ஞாயிறு Special