Posts

Showing posts from October, 2020

புறநானூற்றில் பேய்

Image
 பாடியவர் : பெருஞ்சித்திரனார் பாடப்பட்டோர் : இளவெளிமான் திணை : பொதுவியல் துறை : கையறுநிலை பாடல்: கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா, வாய் வன் காக்கையும் கூகையும் கூடிப் பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் காடுமுன் னினனே, கட்கா முறுநன் தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப், பாடுநர் கடும்பும் பையென் றனவே; தோடுகொள் முரசும் கிழிந்தன, கண்ணே; ஆள்இல், வரைபோல் யானையும் மருப்புஇழந் தனவே; வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப,  எந்தை ஆகுல அதற்படல் அறியேன்; அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற என்ஆ குவர்கொல், என் துன்னி யோரே? மாரி இரவின், மரங்கவிழ் பொழுதின், ஆரஞர் உற்ற நெஞ்சமொடு , ஓராங்குக்  கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு, வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து, அவல மறுசுழி மறுகலின், தவலே நன்றுமன் தகுதியும் அதுவே. விளக்கம் : கள்ளை விரும்பும் காவலன் காட்டில் கிடக்கிறான். அவனை இடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் தாழியின்மேல் செம்பருந்தும், பொகுவல் என்னும் பிணம்தின்னிக் கழுகும் அஞ்சாமல் காத்திருக்கின்றன. வாய் வலிமை கொண்ட காக்கை, கோட்டான், பேய்க்கூட்டம் முதலானவும் சுழன்றுகொண்டிருக்கின்றன. அவனைப

சனிக்கிழமை சங்ககால அசைவ ஸ்பெஷல்

Image
  சனிக்கிழமை சங்ககால அசைவ ஸ்பெஷல்: முயல்கறி: முதல்நாள் இரவு வடித்த உணவை, இரவு நீர்ஊற்றி மறுநாள் மதியம் ஊறவைத்து, வயலில் உழன்று உழைத்து முடித்தபின் உழவர்கள் உண்டனர். இதற்கு "அவியலுணவு" என பெயர். இதற்கு தொட்டுகொள்ள காரம்சாரமாய் முயல்கறி தொட்டுக்கொண்டு உண்டனர். இப்பாடல் திருப்பிடவூர்(இன்றைய திருச்சி மாவட்டம் திருப்பட்டூர்) கிழான்மகன் பெருஞ்சாத்தனின் ஊரின் வளமை குறித்து நக்கீரர் பாடுகையில் இத்தகவலை தருகிறார்.  இந்த பெருஞ்சாத்தனே இன்றைய தமிழகத்தின் முதல் ஐய்யனார் என்ற கருத்தும் உள்ளது. அவர் குறித்து மேலும் அறிய: (https://seriesofgods.blogspot.com/2020/07/blog-post.html?m=1) "மென்புலத்து வயல் உழவர்  வன்புலத்துப் பகடு விட்டுக்   குறுமுயலின் குழைச் சூட்டோடு  நெடுவாளை அவியல்”    என்ற புறநானூற்று பாடல் வரிகளின் மூலம் முல்லை நிலத்தில் தம் எருதுகளை மேயவிட்டுச் சிறிய முயலின் குழைவான இறைச்சியோடும், பல்வேறு வகை அவியல்களோடு பழையச்சோற்றை உண்ட மருத நில உழவன் பற்றிய செய்தியினை நாம் அறியலாம். காடை வறுவல்: தலைவனின் பிரிவினில் வாடிய தலைவியை சந்தித்த அவளது பணிமகன் தான் தலைவனை சந்தித்த நற்செய்த

சங்ககால சாறும் ரசமும்

Image
  சங்ககால சாறும் ரசமும்: தேன்மாச்சாறு : கூத்தராற்றுப்படையில் மாங்கனிசாற்றை தேனுடன் கலந்து உண்ட தகவல் கிடைக்கிறது. "காலம் அன்றியும் மரம் பயன் கொடுத்தலின் காலின் உதிர்ந்தன கரும் கனி நாவல் மாறுகொள ஒழுகின ஊறு நீர் உயவை நூறொடு குழீஇயின கூவை சேறு சிறந்து உண்ணுநர் தடுத்தன தேமா புண் அரிந்து" வறுமையில் வாடும் கூத்தன் ஒருவன், நன்னனின் நாட்டின் செழிப்பை வரும்வழியில் கண்ட பாணருடனும், விறலியருடன் இத்தகவலை பகிர்ந்துகொள்கிறான். கூவைப்பழங்கள் அங்கு நிறைய பழுத்துகிடந்தது,  மாம்பழம் தன் சுவையால் தம்மை உண்பவர் பிற கனிகளை விரும்பாதவாறு தடை செய்யும், எனவே "உண்ணுநர்த் தடுத்தன தேமா" என்றனர்.  சதைப்பிடிப்பும், மனமும், இனிய சுவையும் கொண்டு மாம்பழங்கள் நிறைய பழுத்து கிடந்ததாம். அத்தகைய சிறப்புடைய மாம்பழத்தை சாறாக்கி(சேறு) அதனுடன் தேன் கலந்து  நன்னனின் நாட்டின் அருந்தினர் என்பதனை கூத்தராற்றுபடை கூறுகிறது. (இம்மாமரமே நன்னன் நாட்டு காவல்மரமாகும், நன்னன் நாட்டு மாம்பழத்தின் மணமால் கவரப்பட்ட கோசர் மரபை சேர்ந்த  கர்ப்பினி பெண் ஒருத்தி மசக்கை காரணமாய் ஒரு மாங்கனியை உண்டுவிட, கோசர்கள் எவ்வளவோ கெஞ