Posts

புறநானூற்றில் பேய்

Image
 பாடியவர் : பெருஞ்சித்திரனார் பாடப்பட்டோர் : இளவெளிமான் திணை : பொதுவியல் துறை : கையறுநிலை பாடல்: கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா, வாய் வன் காக்கையும் கூகையும் கூடிப் பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் காடுமுன் னினனே, கட்கா முறுநன் தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப், பாடுநர் கடும்பும் பையென் றனவே; தோடுகொள் முரசும் கிழிந்தன, கண்ணே; ஆள்இல், வரைபோல் யானையும் மருப்புஇழந் தனவே; வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப,  எந்தை ஆகுல அதற்படல் அறியேன்; அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற என்ஆ குவர்கொல், என் துன்னி யோரே? மாரி இரவின், மரங்கவிழ் பொழுதின், ஆரஞர் உற்ற நெஞ்சமொடு , ஓராங்குக்  கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு, வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து, அவல மறுசுழி மறுகலின், தவலே நன்றுமன் தகுதியும் அதுவே. விளக்கம் : கள்ளை விரும்பும் காவலன் காட்டில் கிடக்கிறான். அவனை இடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் தாழியின்மேல் செம்பருந்தும், பொகுவல் என்னும் பிணம்தின்னிக் கழுகும் அஞ்சாமல் காத்திருக்கின்றன. வாய் வலிமை கொண்ட காக்கை, கோட்டான், பேய்க்கூட்டம் முதலானவும் சுழன்றுகொண்டிருக்கின்றன. அவனைப

புள்ளின நிமித்தங்கள்

Image
  புள்ளின நிமித்தங்கள்: நம் சங்கஇலக்கிய நூல்கள் வாயிலாய் பண்டைய தமிழர்களின் நம்பிக்கை சார்ந்த சில விஷயங்களை அறியமுடிகிறது. அதில் ஒன்றுதான் நிமித்தம்(சகுனம்) பார்ப்பது, அப்பழக்கம் இன்றுவரை தொடர்ந்து வருவதை அறியலாம். பின்வரும் தீதினை அரசுக்கு முன்னரே தெரிவிக்கும் "நிமித்தகர்" அரசவையில் கூட உண்டு. அத்தகைய நிமித்தங்களில் "புள்" நிமித்தமும் ஒன்று. புள்ளினம் என்றால் பறவையினம் என்கிறது தொல்காப்பியம். "பொன் உலகு ஆளீரோ?புவனி முழுது ஆளீரோ?நல் நலப் புள்ளினங்காள்" என்ற ஆழ்வார் பாசுரம் வாயிலாகவும் புள்ளினங்கள் குறித்து அறியலாம். சங்கஇலக்கியத்தால் புள்நிமித்தம் குறித்து நிறைய தரவுகள் கிடைக்கிறது. சோழன் நலங்கிள்ளியின் வீரர்கள் பறவைகளின் சகுனம் தீயதாய் இருப்பினும், யாம் போருக்கு செல்வோம் என்கின்றனர். இதன்வாயிலாய் போருக்கு செல்லும் முன் புள்சகுனம் பார்த்ததை அறியலாம். இதுபோன்ற நிறைய உதாரணங்கள் சங்க இலக்கியத்தில் உண்டு. பஞ்சபட்சி சாஸ்திரம் என்ற பிற்கால ஜோதிடநூல் கூட நம்மிடையே வழக்கில் இன்றும் உண்டு. கடையேழு வள்ளலில் ஒருவனான மலையமான் திருமுடிகாரியை புகழும் கபிலர், பறவைசகுனம்

சங்க இலக்கியத்தில் கரும்புஆலை:

Image
  சங்க இலக்கியத்தில் கரும்புஆலை : கரும்பு விளைவித்தலும், அதனை சாறுபிழிந்து பருகியும், பின் அதனை பாகாய் காய்ச்சி வெல்லம் எடுப்பது தமிழர்களின் முதன்மைத்தொழிலாய் இருந்துள்ளது. பதிற்றுப்பத்தின் 75ம் பாடல் இதுகுறித்து சிறிது பேசுகிறது. "வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப் பணிந்து,  நின் வழிப் படாஅர் ஆயின், நெல் மிக்கு,  அறை உறு கரும்பின் தீம் சேற்றுயாணர்" கரும்புவளம் நிறைந்த சேற்றில் சிக்கிய வண்டிச்சக்கரத்தை, அந்தகரும்பினையே கட்டுகளாய் கட்டி சக்கரத்தினை மேடேற்றியதை அகநானூறு கூறுகிறது. இன்றைய கரும்புசாற்றினை பிழியும் இயந்திரத்தை போல அன்றும், கரும்பினை பிழிய ஒரு இயந்திரபொறி இருந்துள்ளது, கரும்புசாறை பிழியும்போது எழும்பும் ஒலி ஆண்யானை பிளிறுவதுபோல் இருக்கும் என்கிறது நற்றிணை. கரும்புச்சாற்றினை காய்ச்சி அதனிலிருந்து வெல்லம் எடுக்கும் ஓர் ஆலை இருந்ததும், அதிலிருந்து புகை வெளிவந்து மண்டி கிடந்ததையும் பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது. இப்பாடலில் "விசயம்" எனும் சொல் பயின்று வருகிறது. இது கருப்பச்சாறு அல்லது கட்டி என்ற பொருள் தருகிறது.

சங்ககால Variety சமையல்

Image
  சங்ககால Variety சமையல்: வேளைப்பூ மிதவை: வேளைக்கீரை என்பது சித்தமருத்துவத்தில் வாதநோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.  அக்கீரையை சிறிது முற்ற விட்டால் கிடைக்கும் வேளைப்பூ, சிறு குழந்தைகளின் வயிற்றுப்போக்கை சரிசெய்ய உதவும், அத்தகைய மருத்துவ குணமுடைய வேளைப்பூவினை,ஆயர்மகள் கொய்து அதனுடன் கெட்டித்தயிரை கலந்து, நன்றாய் கரைத்து அதனை உண்டதாய் புறநானூறு கூறுகிறது "வேளை வெண்பூ வெண்தயிர்க் கொளீஇ, ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை அவரை கொய்யுநர் ஆர மாந்தும்" குறும்பூழ் குழம்பு: தனக்கு நல்ல செய்தி அறிவித்த ஏவலனுக்கு,நெய்ஊறிய குறும்பூழ் சம்பாரத்தோடு கூடிய கறியுடன் சேர்த்த சோற்றினை பெருவாய் என தலைவி வாழ்த்தினால், குறும்பூழ் என்பது காடை ஆகும். காடையை பிடிக்க கண்ணி கட்டுவது இன்றும் கிராமங்களில் வழமை. காடைக்கு கண்ணி கட்டுவது என்பது சாதாரணமானதல்ல, சிறு சப்தமோ அல்லது கண்ணிவைப்பது தெரிந்தாலே அங்கு காடை இருப்பிடத்தை காலிசெய்துவிடும், குறுந்தொகை குறும்பூழ் உணவை பற்றி கூறுகிறது. கல்யாண மோர்க்குழம்பு: பிறந்தகத்தில் செல்லமாய் வளர்ந்த பெண், திருமணம் முடித்து தம்காதல் கனவனுக்காய் ஆசையாய் புளிப்பும் இனிப்

காமவேள் விழவு எனும் சங்ககால காதலர்தினம்

Image
  காமவேள் விழவு எனும் சங்ககால காதலர்தினம்: கணம் எனப்பட்ட குழுச் சமூக அமைப்பிலிருந்து முன்னேறிக் கணவன், மனைவி, வாரிசுகள் என்ற ஒரு தொகுதியை - அதாவது - குடும்பத்தை அடிப்படை அலகாகக் கொண்ட சமூக அமைப்பை நோக்கித் தமிழ்ச் சமூகம் நடைபோட்ட வரலாற்றின் எச்சங்கள் இலக்கியங்களில் பதிவாகியுள்ளன. இப்பதிவுகளெல்லாம் சம காலப் பதிவுகளாக இருக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை. தங்களுடைய சமூகத்தின் முந்து வடிவத்திலிருந்து எஞ்சி நிற்கும் சில கூறுகள் திரிந்த வடிவிலாகிலும் நீடித்து வருகின்ற ஒரு நிகழ்வின் பதிவாகவும் அது இருக்க முடியும். அப்படிப் பார்க்கும்போது, அகநானூற்றில் ”பங்குனி முயக்கம்”, “கொங்கர் மணி அரையாத்து மறுகின் ஆடும் உள்ளி விழவு” (பா 368) என்றும், கலித்தொகையில் ”மல்கிய துருத்தியுள் மகிழ் துணைப் புணர்ந்து... விளையாடும் வில்லவன் விழவு” (35:13-14) என்றும் குறிப்பிடப்படுகின்ற காமன் பண்டிகையே சங்ககாலக் காதலர் தினம் எனத் தெரியவருகிறது. கலித்தொகையில் இடம்பெற்றுள்ள வேறொரு பாடலில் (27:24-26) ”நாம் இல்லாப் புலம்பாயின் நடுக்கம் செய் பொழுதாயின் காமவேள் விழவாயின் கலங்குவள் பெரிதென ஏமுறுகடுந்திண்டேர்கடவி நாம் அமர் காதலர்

கோழியூர் எனும் உறையூர்

Image
  கோழியூர் எனும் உறையூர்: “முறம்போலும் செவியையுடைய யானையைச் சமரிடத்துக் கெடுத்த, புறத்தே சிறையையுடைய கோழி என்னும் நகரின் கண்ணே விருப்பத் தொடு புக்காரூன்க" என்ற சிலப்பதிகார பாடலின் வாயிலாய் உறையூரில் கோழி ஒன்று யானையை போரிட்டு வெற்றிகொண்டதனால் அவ்வூருக்குக் கோழியூர் என்று பெயர் ஏற்பட்டதென்று அறியலாம். “கறங்கிசை விழவின் உறந்தைக் குணாது நெடும்பெருங் குன்றத்து அமன்ற காந்தள்” இதில் வரும் நெடும்பெருங்குன்றமே இன்றைய திருச்சி மலைக்கோட்டை. அக்காலத்தில் உறையூரே பெருநகரம். திருமுறைகண்ட கண்டராதித்த சோழனுக்கு கூட "கோழியூர்வேந்தன்" என பெயர் உண்டு. கீழ்க்கண்ட படத்திலுள்ள சிற்பம் உறையூரின் புராதானமான பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் உள்ளது. இக்கோவில் முதலாம் ஆதித்தன் கால 9 ம் நூற்றாண்டு கற்றளி. 1927 ற்கு பின் நடந்த நகரத்தார் திருப்பணியில் இக்கோவில் புணரமைக்கப்பட்டதால் இக்கோவிலின் பழைய கட்டுமானம் காணாமல் போய்விட்டது. இப்போதுள்ள கோழிசிற்பம் பிற்காலத்தையது எனினும், அதற்கு முன்பே அங்கு சோழர்கால சிற்பம் இருந்திருக்க வேண்டும். உறையூர் நகரின் பண்டைய சிறப்பினை கருதி அங்கு சிலப்பதிகாரம் கூறும் கோழியூரின

குமிட்டிபதி தேர் ஓவியம்:

Image
  குமிட்டிபதி தேர் ஓவியம்: கோவை மாவட்டம் வேலந்தாவளம் அருகேயுள்ள ஊர் குமிட்டிபதி, இப்பகுதியை சுற்றி யானை தொடர்பான பெயர்கள் கொண்ட ஊர்கள் அதிகம் உண்டு. 1. வேளம்=யானை தாவளம்=சந்தை (வேலந்தாவளம்) 2.மாவூத்தம்பதி மாவூத்=பாகன் பதி=தங்குமிடம் இன்னும் சில ஊர்களின் பெயரை ஆராய்ந்தால் யானைதொடர்பான பெயர்கள் கிடைக்கும். இங்குள்ள குமிட்டிபதி எனும் ஊரிலுள்ள குகைத்தளத்தில் வெண்சாந்து பூச்சுள்ள பாறை ஓவியங்கள் காணப்படுகிறது, இதில் தேர்போன்ற ஓர் உருவத்தினை சிலர் கயிறுகட்டி இழுப்பது போன்ற ஓவியம் காணப்படுகிறது. சங்க இலக்கியத்தில் தேர்: நாட் கள் உண்டு, நாள்மகிழ் மகிழின், யார்க்கும் எளிதே, தேர் ஈதல்லே, தொலையா நல்லிசை விளங்கு மலயன் மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர் பயன்கிழு முள்ளூர் மீமிசைப்  பட்ட மாரி உறையினும் பலவே. மலையமான் திருமுடிக்காரியை புகழ்ந்து பாடிய கபிலர் கள் உண்ட போதையில் தேர் அளிப்பது எளிது, ஆனால் தெளிவாக இருக்கும்போதே பலதேர்களை வழங்கியவன் காரி என அவன் புகழ் பாடுகிறார். சங்க இலக்கியத்தில் பெரும்பாலும் போர்க்களத்தில் பயண்படுத்திய தேர்கள் குறித்தே அதிகம் தகவல் கிடைக்கிறது. சங்கம் மருவிய இலக்கியங்களான சில