Posts

Showing posts from December, 2020

புறநானூற்றில் பேய்

Image
 பாடியவர் : பெருஞ்சித்திரனார் பாடப்பட்டோர் : இளவெளிமான் திணை : பொதுவியல் துறை : கையறுநிலை பாடல்: கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா, வாய் வன் காக்கையும் கூகையும் கூடிப் பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் காடுமுன் னினனே, கட்கா முறுநன் தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப், பாடுநர் கடும்பும் பையென் றனவே; தோடுகொள் முரசும் கிழிந்தன, கண்ணே; ஆள்இல், வரைபோல் யானையும் மருப்புஇழந் தனவே; வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப,  எந்தை ஆகுல அதற்படல் அறியேன்; அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற என்ஆ குவர்கொல், என் துன்னி யோரே? மாரி இரவின், மரங்கவிழ் பொழுதின், ஆரஞர் உற்ற நெஞ்சமொடு , ஓராங்குக்  கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு, வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து, அவல மறுசுழி மறுகலின், தவலே நன்றுமன் தகுதியும் அதுவே. விளக்கம் : கள்ளை விரும்பும் காவலன் காட்டில் கிடக்கிறான். அவனை இடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் தாழியின்மேல் செம்பருந்தும், பொகுவல் என்னும் பிணம்தின்னிக் கழுகும் அஞ்சாமல் காத்திருக்கின்றன. வாய் வலிமை கொண்ட காக்கை, கோட்டான், பேய்க்கூட்டம் முதலானவும் சுழன்றுகொண்டிருக்கின்றன. அவனைப

கோழியூர் எனும் உறையூர்

Image
  கோழியூர் எனும் உறையூர்: “முறம்போலும் செவியையுடைய யானையைச் சமரிடத்துக் கெடுத்த, புறத்தே சிறையையுடைய கோழி என்னும் நகரின் கண்ணே விருப்பத் தொடு புக்காரூன்க" என்ற சிலப்பதிகார பாடலின் வாயிலாய் உறையூரில் கோழி ஒன்று யானையை போரிட்டு வெற்றிகொண்டதனால் அவ்வூருக்குக் கோழியூர் என்று பெயர் ஏற்பட்டதென்று அறியலாம். “கறங்கிசை விழவின் உறந்தைக் குணாது நெடும்பெருங் குன்றத்து அமன்ற காந்தள்” இதில் வரும் நெடும்பெருங்குன்றமே இன்றைய திருச்சி மலைக்கோட்டை. அக்காலத்தில் உறையூரே பெருநகரம். திருமுறைகண்ட கண்டராதித்த சோழனுக்கு கூட "கோழியூர்வேந்தன்" என பெயர் உண்டு. கீழ்க்கண்ட படத்திலுள்ள சிற்பம் உறையூரின் புராதானமான பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் உள்ளது. இக்கோவில் முதலாம் ஆதித்தன் கால 9 ம் நூற்றாண்டு கற்றளி. 1927 ற்கு பின் நடந்த நகரத்தார் திருப்பணியில் இக்கோவில் புணரமைக்கப்பட்டதால் இக்கோவிலின் பழைய கட்டுமானம் காணாமல் போய்விட்டது. இப்போதுள்ள கோழிசிற்பம் பிற்காலத்தையது எனினும், அதற்கு முன்பே அங்கு சோழர்கால சிற்பம் இருந்திருக்க வேண்டும். உறையூர் நகரின் பண்டைய சிறப்பினை கருதி அங்கு சிலப்பதிகாரம் கூறும் கோழியூரின

குமிட்டிபதி தேர் ஓவியம்:

Image
  குமிட்டிபதி தேர் ஓவியம்: கோவை மாவட்டம் வேலந்தாவளம் அருகேயுள்ள ஊர் குமிட்டிபதி, இப்பகுதியை சுற்றி யானை தொடர்பான பெயர்கள் கொண்ட ஊர்கள் அதிகம் உண்டு. 1. வேளம்=யானை தாவளம்=சந்தை (வேலந்தாவளம்) 2.மாவூத்தம்பதி மாவூத்=பாகன் பதி=தங்குமிடம் இன்னும் சில ஊர்களின் பெயரை ஆராய்ந்தால் யானைதொடர்பான பெயர்கள் கிடைக்கும். இங்குள்ள குமிட்டிபதி எனும் ஊரிலுள்ள குகைத்தளத்தில் வெண்சாந்து பூச்சுள்ள பாறை ஓவியங்கள் காணப்படுகிறது, இதில் தேர்போன்ற ஓர் உருவத்தினை சிலர் கயிறுகட்டி இழுப்பது போன்ற ஓவியம் காணப்படுகிறது. சங்க இலக்கியத்தில் தேர்: நாட் கள் உண்டு, நாள்மகிழ் மகிழின், யார்க்கும் எளிதே, தேர் ஈதல்லே, தொலையா நல்லிசை விளங்கு மலயன் மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர் பயன்கிழு முள்ளூர் மீமிசைப்  பட்ட மாரி உறையினும் பலவே. மலையமான் திருமுடிக்காரியை புகழ்ந்து பாடிய கபிலர் கள் உண்ட போதையில் தேர் அளிப்பது எளிது, ஆனால் தெளிவாக இருக்கும்போதே பலதேர்களை வழங்கியவன் காரி என அவன் புகழ் பாடுகிறார். சங்க இலக்கியத்தில் பெரும்பாலும் போர்க்களத்தில் பயண்படுத்திய தேர்கள் குறித்தே அதிகம் தகவல் கிடைக்கிறது. சங்கம் மருவிய இலக்கியங்களான சில