புறநானூற்றில் பேய்

Image
 பாடியவர் : பெருஞ்சித்திரனார் பாடப்பட்டோர் : இளவெளிமான் திணை : பொதுவியல் துறை : கையறுநிலை பாடல்: கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா, வாய் வன் காக்கையும் கூகையும் கூடிப் பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் காடுமுன் னினனே, கட்கா முறுநன் தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப், பாடுநர் கடும்பும் பையென் றனவே; தோடுகொள் முரசும் கிழிந்தன, கண்ணே; ஆள்இல், வரைபோல் யானையும் மருப்புஇழந் தனவே; வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப,  எந்தை ஆகுல அதற்படல் அறியேன்; அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற என்ஆ குவர்கொல், என் துன்னி யோரே? மாரி இரவின், மரங்கவிழ் பொழுதின், ஆரஞர் உற்ற நெஞ்சமொடு , ஓராங்குக்  கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு, வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து, அவல மறுசுழி மறுகலின், தவலே நன்றுமன் தகுதியும் அதுவே. விளக்கம் : கள்ளை விரும்பும் காவலன் காட்டில் கிடக்கிறான். அவனை இடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் தாழியின்மேல் செம்பருந்தும், பொகுவல் என்னும் பிணம்தின்னிக் கழுகும் அஞ்சாமல் காத்திருக்கின்றன. வாய் வலிமை கொண்ட காக்கை, கோட்டான், பேய்க்கூட்டம் முதலானவும் சுழன்றுகொண்டிருக்கின்றன. அவனைப

பேடியாடல்

 பேடியாடல்:


ஆடவர் பெண்வேடம் பூண்டு ஆடும் கூத்தினை "பேடியாடல்" என சங்க இலக்கியங்கள் கூறுகிறது. பாண்டரங்கம், துடியாடல், மல்லாடல், குடக்கூத்து, கொடுகோட்டி, பேடியாடல் எனும் ஆறுவகை ஆடல்கள் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது. மாதவி ஆடிய பதினொருவகை கூத்துகளில் இதுவும் ஒன்று.


வாணாசுரன் எனும் அரக்கனின் மகள் உசை என்பவளின் கனவில் காமனின் மகன் அநிருத்தனை கண்டு காமுற்று, களவுக்காதல் தோன்ற, தன் தோழி சித்திரலேகையை வேண்டி அநிருத்தனை அடைந்தே தீருவது என உசை முடிவெடுத்தாள்.இவ்விஷயம் அரக்கவேந்தனுக்கு தெரியவர அநிருத்தனை சிறையிலடைத்தான். சிறையில் உசையும் அநிருத்தனும் காதல் வளர்த்தனர். அநிருத்தனை மீட்க காமனும், திருமாலும், அயிராணியும் வந்தனர். அயிராணி கடையமும், திருமால் குடக்கூத்தும், காமன் பேடியாட்டமும் ஆடி அரக்கனின் நகரில் நுழைந்ததாய் சிலம்பு கூறுகிறது.


காணொளி உதவி: Parthiba Raja sir



Comments

Popular posts from this blog

சனிக்கிழமை சங்ககால அசைவ ஸ்பெஷல்

ஞாயிறு Special

சைவ ஸ்பெஷல்