புறநானூற்றில் பேய்

Image
 பாடியவர் : பெருஞ்சித்திரனார் பாடப்பட்டோர் : இளவெளிமான் திணை : பொதுவியல் துறை : கையறுநிலை பாடல்: கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா, வாய் வன் காக்கையும் கூகையும் கூடிப் பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் காடுமுன் னினனே, கட்கா முறுநன் தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப், பாடுநர் கடும்பும் பையென் றனவே; தோடுகொள் முரசும் கிழிந்தன, கண்ணே; ஆள்இல், வரைபோல் யானையும் மருப்புஇழந் தனவே; வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப,  எந்தை ஆகுல அதற்படல் அறியேன்; அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற என்ஆ குவர்கொல், என் துன்னி யோரே? மாரி இரவின், மரங்கவிழ் பொழுதின், ஆரஞர் உற்ற நெஞ்சமொடு , ஓராங்குக்  கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு, வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து, அவல மறுசுழி மறுகலின், தவலே நன்றுமன் தகுதியும் அதுவே. விளக்கம் : கள்ளை விரும்பும் காவலன் காட்டில் கிடக்கிறான். அவனை இடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் தாழியின்மேல் செம்பருந்தும், பொகுவல் என்னும் பிணம்தின்னிக் கழுகும் அஞ்சாமல் காத்திருக்கின்றன. வாய் வலிமை கொண்ட காக்கை, கோட்டான், பேய்க்கூட்டம் முதலானவும் சுழன்றுகொண்டிருக்கின்றன. அவனைப

ஆமைக்கறி

ஆமைக்கறி:

முந்நீர்நிலைகள் அனைத்திலும் வாழும் உயிரிகள் ஆமைகளாகும். சமீபகாலமாய் இந்த "ஆமைகறி" கதைகள் சமூக வலைதளங்களில் பிரசித்தம். சங்க இலக்கியத்தில் ஆமையை வறுத்து மெயின் டிஷ்ஷாக படைத்து, அதன் முட்டையை வெஞ்சனமாக்கி ஷைட் டிஷ்ஷாக விருந்தினருக்கு உபசரித்துள்ளனர். 

வயலில் உழவர்கள் உழும் பொழுது, உழுபடையால் சிக்கி இறக்கும் ஆமைகளின் சதைகள் குவித்து வைத்த உயரம் மிக அதிகமாய் இருக்கும், விருந்தினருக்கு இதை சமைத்தும் கொடுத்துள்ளனர். புறநானூற்றில் இடைக்காடனார் இதனை,

"உழவர் படைமிளிர்ந் திட்ட யாமையும்
வன்புல கேளிர்க்கு வருவிருந் தயரும்"

ஆமையின் முட்டையை உண்டதை 

"யாமையின் புலவு நூறு முட்டையைத்
தேனா றாம்பல் கிழங்குடன் பெறூஉம்"

என நன்னாகனார் கூறுகிறார்.


Comments

Popular posts from this blog

சனிக்கிழமை சங்ககால அசைவ ஸ்பெஷல்

ஞாயிறு Special

சைவ ஸ்பெஷல்