புறநானூற்றில் பேய்

Image
 பாடியவர் : பெருஞ்சித்திரனார் பாடப்பட்டோர் : இளவெளிமான் திணை : பொதுவியல் துறை : கையறுநிலை பாடல்: கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா, வாய் வன் காக்கையும் கூகையும் கூடிப் பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் காடுமுன் னினனே, கட்கா முறுநன் தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப், பாடுநர் கடும்பும் பையென் றனவே; தோடுகொள் முரசும் கிழிந்தன, கண்ணே; ஆள்இல், வரைபோல் யானையும் மருப்புஇழந் தனவே; வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப,  எந்தை ஆகுல அதற்படல் அறியேன்; அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற என்ஆ குவர்கொல், என் துன்னி யோரே? மாரி இரவின், மரங்கவிழ் பொழுதின், ஆரஞர் உற்ற நெஞ்சமொடு , ஓராங்குக்  கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு, வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து, அவல மறுசுழி மறுகலின், தவலே நன்றுமன் தகுதியும் அதுவே. விளக்கம் : கள்ளை விரும்பும் காவலன் காட்டில் கிடக்கிறான். அவனை இடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் தாழியின்மேல் செம்பருந்தும், பொகுவல் என்னும் பிணம்தின்னிக் கழுகும் அஞ்சாமல் காத்திருக்கின்றன. வாய் வலிமை கொண்ட காக்கை, கோட்டான், பேய்க்கூட்டம் முதலானவும் சுழன்றுகொண்டிருக்கின்றன. அவனைப

மழவர் களவு

 மழவர் களவு:


 பெருவழிகளில் பயணிக்கும் வணிகர்களை குறிவைத்து பாலைநில மழவர்கள் வளைந்த வில்லையும், அம்பையும் கொண்டு வழிப்பறி நிகழ்த்தினர். மழவர்களின் இச்செயலை கண்டு அஞ்சி மற்றகுடியினர் ஊரை காலி செய்வர். வனவிலங்குகள் அதிகம் உலவும் பீர்க்கங்காய் கொடி படரும். ஆட்கள் இல்லாததால் செங்கலினால் கட்டப்பட்ட வீடும், கோவிலும், முருங்கைகீரையை உண்டு வாழும் யானை தன் பிடரியை தேய்ப்பதால் அழிந்துபடுகிறது என அகநானூறு பாடல் ஒன்று கூறுகிறது.


மழவர்களின் வழிப்பறியினால் இறந்துபடும் வழிப்போக்கர்களின் நினைவாய் கற்குவியலை ஏற்ப்படுத்தி வணங்கினர். அதில் மல்லிகை கொடி படர்ந்ததாய் மற்றொரு அகநானூற்று பாடல் கூறுகிறது. கீழே படத்தில் காணப்படும் இரும்புகால சின்னத்தை "உயர்பதுக்கை" என இலக்கியங்கள் கூறுகியது. அக்காலத்தில் இப்பதுக்கைகள் சுற்றுச்சுவருடன் பிரம்மாண்டமாய் இருக்கும். இதில் மழவர்கள் ஒழிந்துகொண்டு ஆநிரையை கவர்ந்துள்ளனர். இம்மழவர் குடியினர் சிந்துசமவெளியிலிருந்து தென்னகம் நோக்கி நகர்ந்ததாய் "Walking with the unicorn" எனும் ஆராய்ச்சி கட்டுரையில் ஆய்வறிஞர்.திரு.ஐராவதம் மகாதேவனும், jonathan mark kenoyer எனும் அறிஞரும் குறிப்பிட்டுள்ளனர்.






Comments

Popular posts from this blog

சனிக்கிழமை சங்ககால அசைவ ஸ்பெஷல்

ஞாயிறு Special

சைவ ஸ்பெஷல்